[one_half]எனது விடியல்
மரத்தைப்போல பனி சுமந்து
மலர்கள் காட்டி
உற்சாகமாய் இருப்பதை
உங்களுக்குச் சொல்கிறேன்
எனது சாலைகள் தூய்மையானதாய்
மனிதர்கள் இடதுபுறம் நடந்தபடி
கட்டடங்கள் பணியில் இருப்பதாய்
ஒரு நாளுடன் சேர்ந்து
உங்களுடன் நம்புகிறேன்
தவறவிட்ட அபாயங்கள் சில
ஞபகத்தில் இருக்கும் அச்சத்திற்கு
துயரத்துடன் எப்போதும் மெளனிக்கிறோம்
எவரேனும் வந்து போகும்
வாழ்க்கையோடு
வார்த்தைகள் கொள்ளும் உறவிற்கு
நான் பல ஆயிரம் மைல்கள் கடந்துள்ளேன்
பழம்பொருள் ஒன்றை விற்றுள்ளேன்
பல்வலி காலத்தில் நீங்களும் வந்திருந்தீர்கள்
ஒருமுறை பலி வாங்கியும்
சிலமுறை முத்தமிட்டும்
நான் இப்படி இருப்பதாக
அம்மரத்திடம் என்ன யோசனை இருக்க முடியும்
யாரையேனும் அதிகபட்சமாக
விமர்ச்சித்ததின் வலியில்தான்
அம்மலர்கள் மலர்ந்துள்ளன
இதை நீங்கள் நம்புவது ஞாபகத்தின்
அச்சத்தில் இருக்கிறது.[/one_half]
[one_half_last][/one_half_last]