[one_half]பேசுவதற்கேதுமற்ற நடுநிசி இரவில்
தொலைபேசியில் அலறினான்
இரவின் வெப்பமும் பகலின் குளுமையும்
கவிதையில் உறைந்துவிட்டதாய்க் கூறி
தனக்கேதேனும் பருக
மீதமிருக்கிறதா என வினவுகையில்
அருகிருந்த காதலியின் கைகள் என்மேல்
தவறி விழுந்தன
சிதறிய முத்தங்களை மிதிபடாமல்
அள்ளிச் சேர்க்க வேண்டும் அடுத்த நாளைக்கு
முத்தங்களை இழுத்துக் கொண்டு செல்லும்
எறும்புக்குத் தெரியாது
காமத்தை நெடுநாளைக்கு எப்படிச் சேமிப்பதென
கால்கள் இடறி விழுமுன்னே
அடையாளம் மறைத்த காலணிகளுக்குள்
பெண்கள் அடைந்துகிடப்பது பற்றியும்
தொலைந்துபோன சின்ரெல்லாக்களை
அவன் மீண்டும் தவறவிட்ட
காலணி கொண்டு எப்படி
அழைப்பது என்பது பற்றியும்
அவனுக்குஸ் சொன்னேன்
சுவர்க் கோழியின் சப்தத்தில் முறிந்து
போன நிழலை சரிப்படுத்திய படியே
கூடுவதற்குள் உரையாடலை
முடிக்கச் சொன்னேன்
காலணிகளைவிடக் கால்கள் மிக முக்கியமானவை.[/one_half]
[one_half_last][/one_half_last]