[one_half]இலையுதிர் காலத்திற்காய்
நீ என்னை இரவில் கேட்டிருந்தாய்
பகலைத் தின்றுவிட்டு
இரவால் கைகளைக் கழுவிக் கொண்டிருக்கிறேன்
நேர்ந்தது ஒரு சம்பவம்
விண்மீன்கள் கண்சிமிட்டும் இரவிற்கு முன்
வேலை செய்யாத தொலைபேசியை
நோக்கி உன் தவம் காற்றில் அலைகிறது
உன் குரல்
நடுங்கும் என் இலைகளை ஸ்பரிசிக்கலாம்
மேலும் அவை பழுத்தும்விட்டன
சிறுவர்கள் சப்தமிட்டு ஓடும் காலையில்
எனது வசந்தகால வார்த்தைகளை
உனக்கென நீ முடங்கிக்கொண்டு நிற்கிறாய்
சன்னலில் பனி படர்கிறது
உனது தனிமையின் மீது என் இலைகள் உதிர்கின்றன
இன்னும் ஒரு சம்பவம் மீதம் இருக்கிறது
இரவலின் பிரிவை அது என்னிலிருந்து
எடுத்துச் செல்லும்
பிறகு அன்பே என் தொலைபேசியும்
உனக்கென உயிர்பெறும்.[/one_half]
[one_half_last][/one_half_last]